பங்குச்சந்தை வர்த்தக உலகில் இரண்டு வழிகள் அதிகம் காணப்படுகின்றன:
• முதலில் கற்றுக்கொண்டு, பின் வணிகம் செய்தல்
• முதலில் வணிகம் செய்ய ஆரம்பித்து, பணத்தை இழந்த பின்னர் கற்றுக்கொண்டேன் என்று சொல்லுதல்,
இரண்டுமே அனுபவத்திற்குத் தான் வழிகாட்டும்,
ஆனால் ஒரே வித்தியாசம் – செலவு!
வர்த்தகம் எளிதாகத் தெரிகிறது – ஆனால் உண்மையில் அப்படி அல்ல!
• இன்று எந்தவொரு பங்குசந்தை Software-ம் எளிதாக அணுகக்கூடியது.
• தகவல்களும், பங்கு பரிந்துரைகளும்(Stock Recommendation), இணையத்தில் போதுமானதாக உள்ளது,
• சில ஆரம்ப வெற்றிகள், உங்களுக்கு திறமையான வர்த்தகராக இருக்கிறீர்கள் என்ற மாயையை உருவாக்கும்.
ஆனால்:
• ஆரம்ப வெற்றி -> அதிக நம்பிக்கை
• சந்தை -> அதிர்ஷ்டத்துக்கு விருது தராது
• உண்மையான அறிவு -> சந்தையின் சூழ்நிலைகளை சமாளிக்க அவசியம்
முதலில் வணிகம் – அனுபவ கற்றல் !
பலர் நேரடியாக சந்தையில் குதிக்கிறார்கள். திட்டமில்லை. சரியான முன் தயாரிப்பு இல்லை
ஒரு சில வீடியோக்கள், சில MEMES, சற்று உற்சாகம் !.
பின்னர் நடப்பது:
• குழப்பமான வர்த்தக முடிவுகள்
• உணர்ச்சிப்பூர்வமான முடிவுகள்
• விரைவான இழப்புகள்
பல இலட்சங்களை இழந்த பின்பு, இழப்புகளை “பயிற்சி கட்டணம்” என்று கூறி சில நேரங்களில் பெருமை கொள்பவர்கள் சிலர்! வருந்துபவர்கள் சிலர்!
ஆனால் இந்த கற்றல் முறை, வலியுடனும், நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடியதும் ஆகின்றன,
புத்திசாலியான வழி: முதலில் கற்றுக்கொள், பின்னர் வணிகம் செய்
ஒரு ஒழுங்கான அணுகுமுறை:
• சந்தையின் அடிப்படை புரிதல்
• அபாய மேலாண்மை கற்றல்
• Strategies Backtest செய்தல்
• Paper Trading மூலம் பயிற்சி
• வர்த்தகங்களை பதிவுசெய்து, ஆய்வு செய்தல்
இந்த கற்றல் முறை மெதுவாக இருக்கலாம், ஆனால் பண இழப்புகளை தவிர்க்க உதவும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
• முன்னதாக கற்றல் = குறைந்த இழப்புகள், அதிக நம்பிக்கை
• பின் கற்றல் = அதிக செலவு, மன அழுத்தம், பலமுறை விரக்தி
சிந்தனை
ஏனெனில் ஒவ்வொரு வர்த்தகமும் ஒரு தேர்வு. சந்தைதான் பரீட்சையாளர் – பரிவு காட்டாது.
அனுபவம் முக்கியம்.
ஆனால் விவேகம் என்பது தயாரிப்பில் இருந்து பிறக்கிறது.
சந்தை உங்களை சோதிப்பதற்கு முன், நீங்கள் கற்றுக்கொள்ள தொடங்குங்கள்.